Archives: பிப்ரவரி 2022

தேவனை அடையாளம் காணுதல்

கால் பெருவிரலை ஊன்றி சுற்றாட்டம் ஆடும் முறை (பிரு எட்) என்பது கூட்டு நடனக்குழுவில் நடனமாடும் முக்கிய பெண் நடன கலைஞர்களும் அதைப்போல மற்ற நடன கலைஞர்களும் பயன்படுத்தும் ஒரு நடன முறையாகும். சிறுமியாக எனது நவீன நடன வகுப்பில் அவ்வாறு ஆடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். சுழன்று, சுழன்று, மயக்கமுண்டாகி தரையில் விழுமட்டும் அவ்வாறு ஆடுவேன். ஆனால் நான் பெரியவளானபோதோ, என் சமநிலையை, கட்டுப்பாட்டை பேணுவதற்கு நான் ஒரு யுத்தியை கற்றுக்கொண்டேன், அதுதான் " அடையாளம் காணுதல்" ஒரு புள்ளியை அடையாளம் வைத்துக்கொண்டு ஒவ்வொரு சுற்றிலும் என்  கண்கள் அதையே பார்க்கும்படி இருக்கையில் நான் முழு சுற்று வட்டமடித்தேன். என் "பிரு எட்" கலையில் கைதேர்ந்தவளாகவும், அதை அற்புதமாக ஆடவும் எனக்கு தேவைப்பட்டதெல்லாம் ஒரே ஒரு மையப்புள்ளி.

நாம் அனைவருமே வாழ்வில் பல திருப்பங்களையும், வளைவுகளையும் சந்திக்கிறோம். நாம் பிரச்சனைகளையே கணித்துக்கொண்டிருந்தால், நாம் எதிர்கொள்ளும் காரியங்கள் கையாள முடியாதவைகளாய் தோன்றும், நம்மை மயக்கமடைய செய்து கிழே விழத்தள்ளும். வேதம் நம்மை நினைவூட்டுகிறது, நாம் நமது மனதை உறுதியாய் வைத்துக்கொண்டால் அதாவது தேவனை கவனிப்போமானால், அவர் நம்மை பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வார். (ஏசாயா 26:3). பூரண சமாதானமென்றால் நம் வாழ்வில் எவ்வளவு திருப்பங்கள் வந்தாலும், நாம் அமைதியாக இருக்கலாம், நம்முடைய பிரச்சனைகள், சோதனைகள் அனைத்திலும் தேவன் நம்மோடிருப்பார் என்ற நிச்சயத்தோடு இருக்கலாம். அவரே "நித்திய கன்மலையாயிருக்கிறார்" (வ.4) நம்முடைய கண்கள் பதியவேண்டிய முக்கியபுள்ளி அவரே ஏனெனில் அவருடைய வாக்குத்தத்தங்கள் மாறாதவைகள்.

அவரிடம் ஜெபத்தின் மூலமாக சேர்ந்து அவருடைய வாக்குத்தத்தங்களை வேத வசனங்களில் வாசித்து, நம் கண்களை அவர் மேலேயே பதித்து ஒவ்வொரு நாளையும் கடந்துசெல்வோமாக. வாழ்நாள் முழுதும் நாம் அற்புதமாய் கடந்துச் செல்ல நம் தேவனை, நம் நித்திய கன்மலையை உதவிக்காக சார்ந்துகொள்வோமாக.

எழும்புதல்

ஒரு விமானம் தாங்கி கப்பலை நாங்கள் சுற்றிப்பார்த்துக் கொண்டிருக்கையில், ஒரு சிறியரக போர்விமானத்தின் விமானி, இத்தகைய குறுகலான ஓடுபாதையில் விமானங்கள் உயரே எழும்ப மணிக்கு 56 கி.மீ வேகத்தில் காற்றடிக்க வேண்டும் என விளக்கினார். இந்த நிலையான காற்றுக்காக கப்பலின் கேப்டன், கப்பலை காற்றுமுகமாய் திருப்புவார். "விமானத்தின் பின்புறத்திலிருந்து தானே காற்றடிக்க வேண்டும்?" என நான் கேட்டேன். "இல்லை விமானம் காற்றுக்கெதிரே பறக்க வேண்டும், அது உயரே எழும்ப அதுதான் ஒரே வழி" என விமானி பதிலளித்தார்.

வாக்குப்பண்ணப்பட தேசத்திலே தம்முடைய ஜனங்களுக்கு காத்துக்கொண்டிருந்த "காற்றுமுகத்தினூடே" அவர்களை நடத்த யோசுவாவை தேவன் அழைத்தார். யோசுவாவிற்கு இரண்டு காரியங்கள் தேவைப்பட்டது. உட்புறமாக அவர், "மிகவும் பலங்கொண்டு திடமனதாயிரு."(யோசுவா 1:7) இருக்க வேண்டும் மேலும் வெளிப்புறமாக அவருக்கு சவால்கள் இருக்க வேண்டும். அரனான பட்டணங்களை எதிர்கொள்ளுதல் (6:1–5), மனசோர்வுண்டாக்கும் தோல்விகள் (7:3–5), ஆகானின் திருட்டு (7:16–26), மேலும் தெடர்ச்சியான யுத்தங்கள் (அதிகாரங்கள் 10-11) என இதுபோன்ற அனுதின பணிகளில் ஆயிரக்கணக்கான இஸ்ரவேலர்களை வழிநடத்த வேண்டும்.

தேவனுடைய கற்பனைகளிலிருந்து யோசுவாவிற்கு உந்துதல் உண்டான காலமுழுதும் யோசுவாவின் முகத்திற்கெதிரே வீசிய காற்று அவருடைய வாழ்வையே உயரே எழுப்பியது. அவர் "நியாயப்பிரமாணத்தின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்க..அதை விட்டு வலது இடதுபுறம் விலகாதிரு(க்க)..இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக் கொண்டிரு(க்க)" வேண்டும், "அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய்" (வ.7 -௮) என்று தேவன் கூறினார்.

என்ன நடந்தாலும் தேவனுடைய வழிகளை பின்பற்ற தீர்மானித்துள்ளீர்களா? சவால்களை எதிர்பாருங்கள். தைரியமாக காற்றுமுகத்திற்கெதிரே பறந்துபோங்கள், நீங்கள் உயரே எழும்புவதை காண்பீர்கள்.

காணப்படுதல்

வழிகாட்டுதலை குறித்த ஒரு கட்டுரையில் ஹன்னா ஸ்செல் என்பவர், வழிகாட்டியானவர் ஆதரிப்பவராக, சவால் மிக்கவராக, ஊக்கமளிப்பவராக இருப்பது அவசியம் ஆனால் "முதலாவதும், மிக முக்கியமானதும் யாதெனில் ஒரு நல்ல வழிகாட்டி உங்களை காண வேண்டும்..... அறியப்படுதல் என்பது விருதுகளினாலும், பிரபலமடைவதினாலும் மட்டும் உண்டாவதில்லை சாதாரணமாக 'காணக்கூடியவராய்' இருப்பதனாலும் தான், அதுவே மனிதனின் அடிப்படை தேவை. மக்கள் அறியப்பட்டவர்களாய், அங்கீகரிக்கப்பட்டவர்களாய், நம்பிக்கைக்குரியவர்களாய் இருக்க வேண்டும்.

புதிய ஏற்பாட்டில், பர்னபா என்பவர் (அவருடைய பெயருக்கு "ஆறுதலின் மகன்" என்று அர்த்தம்) தன்னை சுற்றிலுமிருந்த மக்களை சந்திப்பதில் சாமர்த்தியசாலி. அப்போஸ்தலருடைய நடபடிகள் 9 இல், மற்ற சீஷர்கள் சவுலை குறித்து பயந்திருந்தபோது, இவரோ அவனுக்கு ஒரு வாய்ப்பளிக்க விரும்பினார்.(வ.26) சவுல் (இவன் பவுல் என்றும் அழைக்கப்பட்டான் 13:9) இயேசுவின் விசுவாசிகளை துன்புறுத்துகிறவனாக இருந்தான்.(8:3), ஆகையால் அவனை உண்மையான சீடனாக மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை (9:26).

பல நாட்கள் கழித்து, பவுலும், பர்னபாவும் அவர்கள் "கர்த்தருடைய வசனத்தை அறிவித்திருக்கிற சகல பட்டணங்களிலுமுள்ள சகோதரர்கள் எப்படியிருக்கிறார்களென்று" (15:36) போய்ப்பார்க்க தங்களோடு மாற்குவை கூட்டிக்கொண்டு போவதில் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. அவர்களோடு மாற்கு வருவது பவுலுக்கு ஏற்றதாய் தோன்றவில்லை காரணம் அவர், அவர்களை இதற்கு முன்னரே தனியேவிட்டு பிரிந்து போயிருந்தார். சுவாரசியமாக, பவுல் பின்னர் மாற்குவின் உதவியை கோருகிறார் "மாற்குவை உன்னோடே கூட்டிக்கொண்டுவா; ஊழியத்தில் அவன் எனக்குப் பிரயோஜனமுள்ளவன்." (2 தீமோத்தேயு 4:11).

பவுல், மாற்கு என இருவரையும் சந்திக்க பர்னபா நேரம் ஒதுக்கினார். ஒருவேளை நாம் பர்னபாவை போல மற்றொருவரிடம் உள்ள ஆற்றலை உணருபவராக இருக்கலாம் அல்லது ஒரு ஆவிக்குரிய வழிகாட்டி தேவைப்படும் நபராக நாம் இருக்கலாம். நாம் ஊக்குவிக்க கூடிய நபர்களுக்கு நேராக நம்மை நடத்தவும், நம்மை ஊக்குவிக்க கூடியவர்களை நமக்கு நேராக கொண்டு வரவும் தேவனை நாம் கேட்போம்.

ராஜ தரிசனத்தின் நிறைவேறுதல்

ஒரு சில வழிகளில், ராஜாவின் கதை எங்கே துவங்கியதோ அங்கேயே நிறைவடைந்தது. தொலைக்கப்பட்ட பரதீசில் துவங்கிய கதை, அதை மீண்டும் சுதந்தரிப்பதில் நிறைவடைகிறது. ராஜா முன்னறிவித்ததுபோல, பொல்லாங்கனும்…

எதிர்பாராத விளைவுகள்

என்ன நடக்கிறது என்பதை அறியாமல் போதகரின் சீடர்கள் திகைத்தனர். அவர்கள் வாழ்க்கையில் கண்ட அன்பின் பிரதிநிதியான அவருடைய வார்த்தையை ஒரு நிமிடம் அவர்கள் கேட்டனர். அடுத்த நிமிடம்,…

சிறந்த போதகரின் வருகை

புதிதாய் பிறந்த குழந்தையின் அழுகை மௌனத்தைக் கலைத்தது. அக்குழந்தையின் பிறப்பு அறிவிக்கப்பட்டதிலிருந்து சரித்திரம் மாறியது. அந்த குழந்தையின் முகத்தைப் பார்த்த ஒரு வயோதிகன், “நான் இவ்வளவு காலம்…